தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் தொடரும் கனமழையின் காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, மதுரை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 34% அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு!
வெள்ளிக்கிழமை காலை 7.40 மணி நிலவரப்படி சென்னையில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு, நகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 30 மற்றும் 25 டிகிரியாக இருக்கும் சில பகுதிகளில் கனமழையுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.