கல்வியில் 27 பின் தங்கிய மாவட்டங்களுடன் தமிழகம் – மத்திய அரசு!
இந்தியாவில் கல்வி நிலை குறித்து யுஜிசி (பல்கலைக்கழக மானிய குழு) மேற்கொண்ட ஆய்வில் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாகவும், அதில் 27 மாவட்டங்கள் தமிழகத்தை சேர்ந்தவை என்றும் கூறப்பட்டு அதற்கான விபரங்கள் வெளியாகி உள்ளது.
பின்தங்கிய மாவட்டங்கள்:
இந்தியா முழுவதும் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் குறித்து யுஜிசி (UGC) ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில் இந்தியா முழுதும் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாக கண்டறியப்பட்டது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம் இது குறித்த தகவலை வெளியிட்டது. மேலும் தமிழகத்திலும் 27 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கி இருப்பதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் கவனத்திற்கு – டிஜிபி உத்தரவு!
இந்திய அளவில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்கள் கல்வியில் பின்தங்கிய மாநிலங்களாக இருந்து வரும் நிலையில் தற்போது தமிழகம் கல்வியில் பின்தங்கிய 4வது மாநிலமாக மாறி உள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை சராசரியில் தமிழகம் 50 சதவிகிதத்துடன் முதலிடம் வகிக்கும் நிலையில் 27 மாவட்டங்களில் கல்வி பின்தங்கி இருப்பதாக மத்திய அரசு கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகியவை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.