தமிழகத்தில் ஜூலை 26 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

0
தமிழகத்தில் ஜூலை 26 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழகத்தில் ஜூலை 26 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழகத்தில் ஜூலை 26 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி இந்த திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் கோவில் திருவிழாக்கள் நடத்தப்படாமல் இருந்தது. பிரசித்தி பெற்ற கோவில்களில் பல முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் குறித்த அறிவிப்பு வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இது ஆடி மாசம் என்பதால் முன்னணி கோவில்களில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்த கோவில் யுனஸ்கோவால் உலக பிரதான பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை மூலமாக அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி ஆட்சியர் அறிவிப்பின் படி பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு ஜூலை 26 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பேட்டி!

மேலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 26 விடுமுறை நாள் என்பதால் அதனை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!