Co-Optex 2500 பணியிடங்கள், தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் – உத்தரவு பிறப்பிப்பு!

0
Co-Optex 2500 பணியிடங்கள், தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் - உத்தரவு பிறப்பிப்பு!
Co-Optex 2500 பணியிடங்கள், தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் - உத்தரவு பிறப்பிப்பு!
Co-Optex 2500 பணியிடங்கள், தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் – உத்தரவு பிறப்பிப்பு!

Co-Optex நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக Co-Optex-ல் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

2500-காலிப்பணியிடங்கள்

தற்போது Co-Optex-ல் 175 விற்பனை நிலையம் மற்றும் 8 ஒப்பந்த விற்பனை நிலையம் மேலும் 18 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இதில் தற்போது 2,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் நிரந்தர பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்காலிக பணியாளர்களை கொண்டு விற்பனை நிலையங்களிலும், சேமிப்பு கிடங்குகளிலும் பணிபுரிய வைத்து வருகிறது. இதன் மூலம் இங்கு 500க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், 200க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் என மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது

தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன்? தென்னிந்தியாவில் அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று பரவல்!

தற்போது தற்காலிக பணியாளர்களின் ஆரம்ப கட்ட ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. அதனால் தற்காலிக பணியாளர்களுக்கு தலைமை அலுவலக உத்தரவுப்படி அந்தந்த மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச கூலி தொகையை வழங்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்து உள்ளது. இது தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் அவர்கள் தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நிர்ணயத்த ஊதியத்தை விட குறையாமல் இருக்க வேண்டும் என்று அனைத்து மண்டல மேலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் செவ்வாய் கிழமை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இவ்வாறு கூறியதை அடுத்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை பல மண்டல மேலாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று ஒரு சில மண்டல மேலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே ஒரு சில தற்காலிக பணியாளர்களின் மாத சம்பளம் ரூ.18 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆதலால் அனைவருக்கும் என்பதை மாற்றி இனிமேல் வரும் தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என அறிவிக்க வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!