தமிழக அரசு சார்பில் ரூ.25,000 & ‘கோட்டை அமீர்’ மத நல்லிணக்க பதக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறாக தேர்ந்தெடுக்கபடுபவர்களுக்கு பதக்கமும் 25,000 ரூபாய் காசோலையும் வழங்கப்படும்.
மத நல்லிணக்க விருது:
தமிழகத்தில் சாதி மத பிரச்சனைகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளை தடுக்க அரசு சமூக ஆர்வலர்களும் மக்களுக்கு குறிப்பாக வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினரான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். சில நிறுவனங்கள் தானாகவே முன்வந்து இது போன்ற மத நல்லிணக்கத்திற்கான தொண்டாற்றி வருகிறது. அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பாக விருது வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நவ.21ம் தேதி மெகா முகாம்!
அதன்படி மத நல்லிணக்கத்திற்காக அரும்பாடுபட்டு உயிர் கோட்டை அமீர் அவர்களின் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் ஏற்படுத்தப்பட்டு ஆண்டு தோறும் தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காக அரும்பாடுபட்டவர்களுக்கும் சிறப்பாக சேவை புரிந்து வருபவர்களுக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது. ‘கோட்டை அமீர்’ மத நல்லிணக்க விருது ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தற்போது இந்த விருத்திக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நவ.19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை விருது பெற தகுதியானவர்கள் டிச.15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலமாகவே அல்லது https://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்பலாம். அரசு கொடுத்துள்ள காலக்கெடுவுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் மேலும் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வு குழுவால் ஆராயப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ஒரு பதக்கமும் 25,000 ரூபாய் காசோலையும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.