2022 ஆம் ஆண்டில் 24 நாட்கள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
அடுத்து வரவிருக்கும் புதிய ஆண்டில் கிட்டத்தட்ட 24 நாட்கள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக உத்திர பிரதேச மாநில அரசின் விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பொது விடுமுறை
இன்னும் இரண்டே வாரங்களில் வரவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு, ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அரசுத்துறை ஊழியர்கள், கல்வி நிறுவனங்களுக்கான விடுமுறை பட்டியல் என ஒவ்வொன்றும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உத்திர பிரதேசத்தை சேர்ந்த பள்ளிகளுக்கு 2022ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – மீனவர்களுக்கு எச்சரிக்கை! வானிலை அறிக்கை!
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு விடுமுறை நாட்களின் காலண்டரின் படி வரும் 2022ம் ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 24 நாட்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது, இந்த 24 நாட்கள் பொது விடுமுறை காலத்தில் குளிர்கால விடுமுறை மட்டும் டிசம்பர் 31 முதல் 2022 ஜனவரி 14ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் டிசம்பர் 31 முதல் மூடப்படும்.
தமிழகம் வர இ-பதிவு கட்டாயம், தீவிர கட்டுப்பாடுகள் – அரசு அதிரடி அறிவிப்பு!
இப்பள்ளிகளுக்கு 15 நாட்கள் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது. இது தவிர மற்ற அரசுப் பொது விடுமுறைகள், பண்டிகை கால விடுமுறைகள், தேசிய அளவிலான விடுமுறைகள் என குறிப்பிட்ட சில நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வரும் 2022ம் ஆண்டில் பல்வேறு பொது விடுமுறைகள் ஞாயிற்று கிழமைகளில் வருவதால் அது வார இறுதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.