தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 21 நாட்கள் தற்செயல் விடுமுறை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு என்று பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 முதல் 14 வரை சிறப்பு தற்செயல் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அறுவை சிகிச்சை செய்த அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள்
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் பல்வேறு தனியார் துறை ஊழியர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று பணியில் ஈடுபட்டார்கள். இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மார்ச் 28,29 ஆகிய இரு நாட்களில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – முக்கிய சேவைகள் பாதிப்பு!
அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களை போல 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அத்துடன் அரசு ஊழியர்களுக்கு ஏதேனும் கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலோ அவர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம் என்றும் அரசு அறிவித்தது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கொரோனா சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பித்தும் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அரசு அனுமதித்துள்ளது.
மேலும் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் சிறப்பு விடுமுறையாக 9 மாதங்களாக இருந்ததை தற்போது 12 மாதங்களாக உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தற்போது மற்றொரு சலுகையையும் தமிழக அரசு வழங்க உள்ளது. இது குறித்த அரசாணையில், அரசு பெண் ஊழியர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அவர்களுக்கு 21 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு பெண் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.