2022 ஆம் ஆண்டுக்கான “சரஸ்வதி சம்மான் விருது” – தமிழ் எழுத்தாளர் தேர்வு! குவியும் பாராட்டுக்கள்!
இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான சரஸ்வதி சம்மான் விருது 2022 ஆம் ஆண்டில் தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சரஸ்வதி சம்மான் விருது
இந்தியாவில் சிறந்த இலக்கியங்களுக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விருதானது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பட்டியலில் உள்ள 22 மொழிகளில் எழுதப்படும் கவிதை இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படும். கல்வி கடவுள், சரஸ்வதி பெயரை வைத்து இந்த விருது வழங்கப்படுவதால் உயரிய இலக்கிய விருதாக இந்த விருது இருக்கிறது.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது 1991 ஆம் ஆண்டு முதல் கேகே பிர்லா நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 15 லட்சம் பரிசு வழங்கப்பட்டு. தமிழில் ஏற்கனவே எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, அஅ. மணவாளன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.