TATA நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழகத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஆலை!

0
TATA நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழகத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஆலை!
TATA நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழகத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஆலை!
TATA நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழகத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஆலை!

தமிழகத்தில் டாடா குழுமம் சூரிய ஒளி மின்கல உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்தை ரூ.3000 கோடி முதலீட்டில் தொடங்கவுள்ளது. இது குறித்து தமிழக அரசுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சூரிய ஒளி மின்கல உற்பத்தி:

இந்தியாவில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் சூரிய ஒளி மின்கல உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்டான் பகுதியில் 4 கிகாவாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த சூரிய ஒளி மின்கல உற்பத்தி அலகு அமைக்கும் திட்டம் தொடங்கவுள்ளது. இது குறித்து டாடா குழுமத்தின் சோலார் பவர் பிரிவு தமிழக அரசுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு மீன்வளத் துறையில் ரூ.30,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது! டிச.1 நேர்காணல்!

இந்த திட்டமானது ரூ.3000 கோடி மதிப்பிலானது. இந்த சூரிய சக்தி சேமிப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசு தரப்பில், டாடா குழுமத்தின் சோலார் மின் உற்பத்தி அலகு தமிழ்நாட்டினை சூரிய சக்தி உற்பத்தி மையமாக நிலைநிறுத்தவும், தென் மாநிலங்களுக்கு புதிய முதலீடுகளை கொண்டு வரவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையின் அருகில் உள்ள ஓரகடத்தில் 1.2 கிகா வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்கல உற்பத்தி தொழிற்சாலையானது ஜூலை மாதம் நிறுவப்பட்டது. இதனை விக்ரம் சோலார் நிறுவனம் நிறுவியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் புதன்கிழமை (நவ.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் சென்னை அருகே உள்ள பிள்ளைப்பாக்கத்தில் சோலார் மின் உற்பத்தி பிரிவை தொடங்கவுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சக்தி தயாரிப்பு ஆற்றலை பன்மடங்கு அதிகரிக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!