TNPSC குரூப்-4 பாடத்திட்டம் வெளியீடு எப்போது?? தேர்வர்கள் கோரிக்கை!!

0
TNPSC குரூப்-4 பாடத்திட்டம் வெளியீடு எப்போது?? தேர்வர்கள் கோரிக்கை!!
TNPSC குரூப்-4 பாடத்திட்டம் வெளியீடு எப்போது?? தேர்வர்கள் கோரிக்கை!!
TNPSC குரூப்-4 பாடத்திட்டம் வெளியீடு எப்போது?? தேர்வர்கள் கோரிக்கை!!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பாக அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தற்போது இந்த தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகிய நிலையில், சில கல்வியாளர்கள் இந்த அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தேர்வாணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் :

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படுகிறது. வழக்கமாக நடத்தப்படும் தேர்வுக்கு மாறுதலாக இரண்டு கட்டங்களாக முதன்மை தேர்வு நடத்த தேர்வு ஆணையம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாற்றத்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பரவலாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

குடியரசு தினவிழா அணிவகுப்பு பாராட்டு – 12 தமிழக மாணவர்கள் தேர்வு!!

இந்நிலையில் கடந்த வருடம் குரூப் 4 தேர்வில் 16.29 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகின. அதில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 13.59 லட்சம் ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பலர் வேலையிழந்த சூழ்நிலையால் போட்டித் தேர்வுகளில் ஆர்வம் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் 20 லட்சத்தை தாண்டும்.

10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு கூடுதல் அவகாசம் தேவை – மாணவர்கள் கோரிக்கை!!!

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “குரூப் 4 தேர்வுகளில் இருமுறை தேர்வு முறையை அமல்படுத்தினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே அந்த திட்டத்தை ரத்து செய்து பழைய முறைப்படியே தேர்வுகள் நடத்தப்படும்” எனக் கூறினார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாததால் தேர்வுக்கு தயாராகிவரும் தேர்வர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் பாடத்திட்டம் குறித்த விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை. 20 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு இந்த தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் இருந்தால் தேர்வாணையம் நோக்கி போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!