தமிழகத்தில் மேலும் 2 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா – பெற்றோர்கள் அச்சம்!
தமிழகத்தில் சில பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 2 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கமானது முதல் மற்றும் இரண்டாம் அலை என தீவிரமாக பரவிய நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலம் படங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வு ஒத்திவைப்பு – பள்ளிக்கல்வித்துறை!
மாணவர்கள் சமூக இடைவெளி மற்றும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று தாக்கி வருகிறது. அதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியகாரன் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவருக்கு உடல்நிலை சரி இல்லை. இதனையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
CTET மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு – இன்று விண்ணப்ப பதிவு தொடக்கம்!
அதனை தொடர்ந்து அந்த பள்ளியில் உள்ள 253 மாணவர்கள், 26 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின் மாணவனின் வீட்டு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதற்கடுத்து கடத்தூர் பள்ளிக்கூட பிரிவு என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதியான நிலையில், பள்ளியில் உள்ள 210 மாணவர்கள், 30 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.