இந்திய IT துறையில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – 2022 ஆம் நிதியாண்டில் திட்டம்!
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்தியாவில் உள்ள சில தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் 2021-22 ஆம் நிதியாண்டில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலை வாய்ப்புகள்
இந்தியாவில் தற்போது நிலவி வரும் கொரோனா பேரலை தாக்கம் காரணமாக பல்வேறு வகையான தொழில்கள் முடங்கியுள்ள சூழலில், தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதாவது ஊரடங்கு காலத்துக்கு பின்பாக அதிகரித்து வரும் தொழில்நுட்ப சேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
BSNL பயனர்களுக்கு ஷாக் நியூஸ் – குறைந்த விலை ரீசார்ஜ் பிளான் நீக்கம்!
அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப சேவை வழங்குனரான TCS, இன்போசிஸ், விப்ரோ போன்றவை புதிய நிதியாண்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே பல IT நிறுவனங்களும், 2021-22 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 50,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை தனது நிறுவனங்களில் சேர்த்துள்ளது. அதே நேரத்தில் IT துறையின் புதிய வேலை வாய்ப்புகள் 2021-22 ஆம் நிதியாண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமாகக்கூடும் என திறமை நிபுணர் மற்றும் இணை நிறுவனர் எக்ஸ்பெனோ கமல் கரந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் IT துறையில் சுமார் 2.78 லட்சம் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை மாதத்தை விட 4% குறைவு என அறிக்கைகள் தெரிவித்துள்ளது. எனினும் IT நிறுவனங்களின் ஆகஸ்ட் மாதத்துக்கான புதிய வேலை வாய்ப்புகள் CXO ஆன் போர்டிங், திறன் விரிவாக்கம், புதிய முயற்சிகள் மற்றும் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களின் கூட்டு மேம்பாட்டு, மறுசீரமைப்பு திட்டங்களில் அதிகமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.