தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தவிருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அனைத்துக் கட்சி கூட்டம்:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவர்கள் உள்ளனர். சமீபத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. எனவே தமிழகத்தில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என அறிவிப்புகள் வெளியானது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடல்? வேகமெடுக்கும் கொரோனா!
கொரோனா பாதுகாப்பு காரணமாக உள்ளாட்சி தேர்தலானது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என்றும் அனுமதி வழங்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தற்போது செப்டம்பர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? நீடிக்கும் சிக்கல்!
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.