தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? நீடிக்கும் சிக்கல்!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? நீடிக்கும் சிக்கல்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? நீடிக்கும் சிக்கல்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? நீடிக்கும் சிக்கல்!

தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆரம்பப் பள்ளிகளை திறப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

கடந்த ஏப்ரல் மாதம் முதல் பெருகி வந்த கொரோனா பரவலால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ளதால், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கியது. நெடு நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தருகின்றனர். இதனிடையே ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு அரசு ஆலோசனை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

ஆனால் இம்மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பதில் தற்போது சிக்கல்கள் எழுந்துள்ளது. அதாவது நேற்று (செப்டம்பர் 3) அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 தனியார் பள்ளி மாணவிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 1 அரசுப்பள்ளி மாணவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தவிர கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும், நெய்வேலி தனியார் பள்ளியில் உள்ள 2 ஆசிரியைக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவர்கள் அச்சம்!

இதனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்த முடிவு இப்போதைக்கு தள்ளி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 1500 என்ற அளவில் பதிவாகி வருவதால், பள்ளிகளில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் சந்திக்க நேருவதால் அது நோய் பரவல் பகுதியாக மாற கூடாது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதனால் வரும் வாரங்களில் இவ்வகை பாதிப்புகள் அதிகரித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!