உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – அண்ணா பல்கலை அறிவிப்பு!
தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை அறிவிப்பு:
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சரவண விக்ரம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஆன கதை – என்ஜினீயர் டூ நடிகர்!
இதனால் தேர்தல் நடைபெறும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழிலாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மொத்தம் உள்ள 14,573 வாக்குச்சாவடிகளில், முதற்கட்டமாக 7,921 வாக்குச்சாவடிகளில் அக்டோபர் 6ம் தேதியான நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சொந்த வீடு வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வங்கிகள் வாரி வழங்கும் கடன்கள்!
இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் நாளை தேர்தலை ஒட்டி மற்றும் 9ம் தேதி என்று இரண்டு நாட்களுக்கு அண்ணா பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த விடுமுறை அறிவிப்பு தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்கு மட்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்வதற்காகவும், தேர்தல் பணிகள் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.