இன்று தொடங்கி 2 நாட்கள் முழு ஊரடங்கு – மாநில அரசின் உத்தரவு!
கேரள மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு வார இறுதி ஊரடங்கு இரண்டு இன்று தொடங்கி 2 நாட்களுக்கு கடைபிடிக்கப்பட உள்ளது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
வார இறுதி ஊரடங்கு:
கேரள மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, 13,750 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,30,833 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 130 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 15,155 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,30,390 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மாநிலத்தின் பாதிப்பு விகிதம் 10.55% ஆக உள்ளதாகவும் மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மணிப்பூர் அரசு அறிவிப்பு!
நேற்று மட்டும் 10,687 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளதாகவும், இதனால் மாநிலத்தில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,93,242 ஆகவும் உள்ளது. தற்போது 1,21,944 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் கொரோனா தொற்று பதிவுகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இறப்புகள் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
கேரளா முழுவதும் இன்று முதல் முழுமையான ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாகவும், திங்கள்கிழமை காலை வரை அமலில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு வாரியாக மாவட்டங்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளின் வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்:
- வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் சேவைகளும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்.
- ஏ, பி மற்றும் சி மாவட்டங்களில் உள்ள கடைகள் முன்பு செயல்பட அனுமதிக்கப்பட்ட நாட்களில் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். ஜூலை 21ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் இந்த தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
- டி பிரிவு பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடுவதோடு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.