நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மணிப்பூர் அரசு அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு வகை புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் நாளை (ஜூலை 18) முதல் அடுத்து வரும் பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு அமல்:
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை குறைந்து வரும் நிலையில், புதிய வகையான டெல்டா மாறுபாடு வைரஸ் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் பிரேன் சிங் கூறுகையில், மாநிலம் முழுவதும் நாளை (ஜூலை 18) முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.
அரசுப்பணிகளுக்கான முதன்மை தேர்வுகள் ரத்து – ஆந்திர அரசு அறிவிப்பு!
இந்த பொதுமுடக்க காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளிய வர வேண்டாம் எனவும் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மாநில மற்றும் மத்திய படைகள் கண்காணிப்பில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மணிப்பூரில் கொரோனா டெல்டா மாறுபாடு வைரஸ் வகை பரவலடைந்து கொண்டிருப்பதால், நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, ஜூலை 18 ஆம் தேதி முதல் பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அறிவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த காலத்தில் தடுப்பூசி, கொரோனா பரிசோதனை, மருத்துவ சேவைகள், குடிநீர் வழங்கல், மின்சாரம், தொலைத்தொடர்பு, இணைய சேவைகள், விமானப் பயணம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர ஜூலை 21 ஆம் தேதி அன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும். மேலும் இந்த தளர்வுகளின் போது கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.