தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? நாளை மறுநாள் அறிக்கை தாக்கல்!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து நாளை மறுநாள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்து வந்தது. அதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் கல்வி தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு!
ஆன்லைன் பாடங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. கொரோனா 2ம் அலை தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று – பெற்றோர்கள் அச்சம்!
தற்போது 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் தேதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து வரும் நாளை மறுநாள் (செப்.15ம் தேதி) அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பள்ளிகள் திறக்கும் பட்சத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.