தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற பேரவையின் இன்றைய (செப்டம்பர் 13) கூட்டத் தொடரில், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகளை முதல்வர் இன்று (செப்டம்பர் 13) வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வந்த அரசு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டி வந்தது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று – பெற்றோர்கள் அச்சம்!
ஆனால் அரசு அறிவித்தது போல கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதற்கிடையில் சமீபத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நகைக்கடன் தள்ளுபடி தொடர்புடைய அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.
தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் – வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!
இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 13) நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின், ‘தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்றுக்கொண்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த தள்ளுபடி சலுகையானது, தகுதியின் அடிப்படையில் அதாவது ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் சுமார் ரூ.6000 கோடி அளவிலான நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.