அரசு பள்ளிகளில் விரைவில் 18,000 ஆசிரியர்கள் நியமனம் – முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!

0
அரசு பள்ளிகளில் விரைவில் 18,000 ஆசிரியர்கள் நியமனம் - முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் விரைவில் 18,000 ஆசிரியர்கள் நியமனம் - முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் விரைவில் 18,000 ஆசிரியர்கள் நியமனம் – முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!

கொரோனா பேரிடருக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் பள்ளிகள் ஹரியானா மாநிலத்தில் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் முயற்சியில் மாநில அரசு இறங்கி உள்ளது. இது குறித்த முக்கிய தகவலை அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் நியமனம்:

நாடு முழுவதும் 2022 – 2023 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையானது நிலவுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டுகளில் ஊரடங்கு மற்றும் தொற்று அச்சம் காரணமாக பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.

ரயில் நிலையத்தில் இதுவரை இல்லாத புதிய வசதி.. இனி அவஸ்தையே இல்ல.. குஷியில் பயணிகள்!

அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் பணியிடங்களுக்கு மாநில அரசால் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட முடியாத சூழல் ஏற்பட்டத்தால் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹ்தக்கில் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ஹரியானா பள்ளிகளில் விரைவில் 18,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

மேலும் தொடர்ந்து பேசிய அவர், இந்த 18,000 ஆசிரியர்களில் 11,000 பேர் நிரந்தர ஆசிரியர்களாகவும், 7,000 பேர் ஹரியானா திறன் வேலைவாய்ப்பு கழகம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு தரமான பள்ளிக் கல்வியை அளிக்கும் வகையில் அரசு பணியாற்றி வருவதாகவும், இதுவரை 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5 லட்சம் டேப்லெட் (tablet) வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், இரட்டை மேசைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!