மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.26 சூப்பர் அறிவிப்பு – 18 மாத DA நிலுவை தொகை விரைவில்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.26 சூப்பர் அறிவிப்பு - 18 மாத DA நிலுவை தொகை விரைவில்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.26 சூப்பர் அறிவிப்பு - 18 மாத DA நிலுவை தொகை விரைவில்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.26 சூப்பர் அறிவிப்பு – 18 மாத DA நிலுவை தொகை விரைவில்!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு கடந்த 18 மாத காலமாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் நிலையில் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசின் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நிலுவை தொகை:

செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2020 ஜனவரி முதல் நாட்டில் இருந்த கொரோனா பேரிடர் நிலைமையின் காரணமாக ஏற்பட்ட அதிக செலவினங்களை ஈடு செய்யும் பொருட்டு அகவிலைப்படி உயர்வானது அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது. இந்த நிலை 2020 ஜனவரி 1, 2020 ஜூலை 1, 2021 ஜனவரி 1 ஆகிய மூன்று தவணைகளாக நீடித்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த மூன்று தவணைகளுக்குமான da உயர்வு முறையே 4%,3% மற்றும் 4% ஆக அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசில் 7,500+ காலிப்பணியிடங்கள் – SSC தேர்வாணையம் அறிவிப்பு!

இதனால் 2020 ஜனவரி 1 வரை 17% ஆக இருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA மற்றும் DR தொகையானது மொத்தம் 11% அதிகரிக்கப்பட்டு 28% ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையிலும் இனி வரும் மாதங்களில் இருந்து அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து அந்த 18 மாத காலத்திற்குமான நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தது.

தமிழகத்தில் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் 8 படங்கள் – முழு விபரம் இதோ!

தற்போது அதன்பிறகான 2021 ஜூலை 1 தவணைக்கான DA 3% அதிகரிக்கப்பட்டு தற்போது மொத்த அகவிலைப்படையானது 31% ஆக உள்ளது. தற்போது அந்த 18 மாத DA நிலுவை தொகையை ஊழியர்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜனவரி 2022 சம்பளத்துடன் நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையைப் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் அறிக்கையின் படி பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பான அறிவிப்பை ஜனவரி 26, 2022 அன்று வெளியிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!