தமிழக அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை, 50% மட்டுமே அனுமதி – முக்கிய கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை, 50% மட்டுமே அனுமதி - முக்கிய கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை, 50% மட்டுமே அனுமதி - முக்கிய கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை, 50% மட்டுமே அனுமதி – முக்கிய கோரிக்கை!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக பரவி வருவதை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்கள்:

இந்தியாவில் கடந்த 1 மாத காலமாக புதிய தாக்குதலாக ஓமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இருந்து முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான் தொற்று 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஓமிக்ரான் பரவி வரும் இந்த நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படாதவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.26 சூப்பர் அறிவிப்பு – 18 மாத DA நிலுவை தொகை விரைவில்!

அந்த வகையில் கடந்த மாதம் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோயின் தீவிரம் அதிகரித்தால் மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என்று மாநில அரசுகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊழியர்களை 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் 8 படங்கள் – முழு விபரம் இதோ!

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒரு வித அச்சத்துடன் பணிக்கு சென்று வருகின்றனர். அதனால் அவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அரசு பணியில் உள்ள கர்ப்பிணி பெண்களின் உடம் நலம் பாதுகாக்கப்படும் மற்றும் பிற அரசு ஊழியர்களை தொற்று பாதிப்பிலிருந்து தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!