ஒரே மாதத்தில் EPFO திட்டத்தில் 18.75 லட்ச உறுப்பினர்கள் சேர்ப்பு – பட்டியல் வெளியீடு!
கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே EPFO திட்டத்தில் 18.75 லட்ச உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பட்டியலை வெளியிட்டுள்ளது.
EPFO:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கடந்த ஜூலை மாதத்திற்கான ஊழியர்களின் சம்பளப் பட்டியல் விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் 18.75 லட்சம் உறுப்பினர்கள் EPFO திட்டத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல், 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகளவில் EPFO அமைப்பில் இணைய ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஊதியத் தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 3.86 லட்சம் பெண் உறுப்பினர்கள் சம்பளப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உரிமைத்தொகை வாங்காதவர்களுக்கு வந்த புதிய அப்டேட் – அரசின் அதிரடி நடவடிக்கை!
இதனிடையே, அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டத்தில் இணைந்த மாநிலங்களின் பட்டியலையும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதாவது, அதிகளவில் மகாராஷ்டிரா மாநில தொழிலாளர்கள் தான் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டத்தில் இணைந்ததாகவும், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து உறுப்பினர் சேர்க்கையில் அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.