ஹிமாச்சலப் பிரதேசத்தில் 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதம் ரூபாய் 1500 உதவித்தொகை வழங்கும் என்பதற்கான அறிவிப்பை மாநில அரசு நேற்று வெளியிட்டது.
ரூ.1500 உதவித்தொகை:
கடந்த சட்டசபை தேர்தலின் போது இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உதவித்தொகை 1500 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தற்போது அங்கு முதல்வராக உள்ள சுக்கு விந்தர் சூப்பு பொறுப்பேற்ற பிற்கதுசுக்விந்தர் சுகு அவர்கள், பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட உதவித்தொகை வழங்குவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.
மக்களவை தேர்தல் எதிரொலி.. ‘க்யூ.ஆர்., கோடு’ ஸ்கேனிங் முறை ஏற்பாடு – முழு விவரம் உள்ளே!
அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து 18 முதல் 55 வயது உடைய பெண்களுக்கு ‘இந்திரா காந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜனா திட்டம்’ கீழ் மாதம் ரூபாய் 1500 வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் ஐந்து லட்சத்துக்கு அதிகமானோர் பயன்பெறுவார்கள் என்றும் இதில் முதல் கட்டமாக 800 கோடி செலவிடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திலிருந்து வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், மத்திய மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது