மத்திய அரசு ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு & ஓய்வூதியம் – வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!
தற்போது பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 5% ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சம்பள உயர்வு
சமீப காலமாக நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்ட பாகிஸ்தான் அரசாங்கம் தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 5% ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முடிவு, கூட்டாட்சி அரசாங்கத்தின் தேர்தல் சார்ந்த பட்ஜெட் தேசிய சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியாகி இருக்கிறது.
இந்திய சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு முடிவு? மத்திய அரசின் திட்டம்!
இந்த ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் ‘நிதி அமைச்சகத்தின் 10% உயர்வு திட்டத்தை நிராகரித்த பிரதமர் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 15% உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளார். அந்த வகையில் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் தற்காலிக கொடுப்பனவுகளை இணைப்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஓய்வூதியமும் 5% ஆக உயத்தப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தற்போது அரசாங்க ஊழியர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
இப்போது மத்திய அமைச்சரவையின் இந்த முடிவைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தனது பட்ஜெட் உரையில் இந்த முடிவுகளை மீண்டும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் மருத்துவ உதவித்தொகையை உயர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்களின் கோரிக்கை மற்றும் பணவீக்கத்தை கவனத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.