இந்திய சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு முடிவு? மத்திய அரசின் திட்டம்!
இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பாஸ்டேக் முறை முடிவுக்கு வரவுள்ளது. புதிய வசூல் முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் திட்டம்:
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும் போது கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் ஏற்படும் நேர வியரத்தை தடுக்க பாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகம் செய்தது. அதன்படி வாகனத்தின் முகப்பில் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அதன்பிறகு சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும் போது அங்குள்ள கருவிகள் தானாகவே கட்டணத்தை வசூல் செய்யும். இந்த முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.
ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புகைப்படம் & முகவரியை மாற்றும் வழிமுறைகள்!
இந்த பாஸ்டாக் கட்டண முறையில் உள்ள மற்றொரு பிரச்சினை என்னவென்றால், வாகனங்கள் குறைந்த தூரம் சென்றாலும் முழுக் கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சுங்கச் சாவடியைத் தாண்டினாலோ அல்லது நீங்கள் வேறு பாதையில் பிரிந்து செல்ல வேண்டியிருந்தாலோ அடுத்த உள்ள சுங்கச் சாவடியிலும் ,முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதனால் இந்த பாஸ்டேக் முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறைக்கு மாற்றாக ஒரு வாகனம் நெடுஞ்சாலையில், எவ்வளவு தொலைவு பயணித்திருக்கிறதோ அதற்கேற்ற வகையில் கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
வாகனம் சுங்கச்சாவடியில் உள்ள நெடுஞ்சாலையில் நுழைந்ததும் வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ், அந்த வாகனம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் தொலைவு கணக்கிடும். நீங்கள் நெடுஞ்சாலையில் பயணத்தை முடிக்கும் போது மொத்த பயணத்தின் தூரம் கணக்கிடப்பட்டு அதற்கான தொகை வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டுவிடும். ஏற்கனவே ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இந்த முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.