தமிழக விவசாயிகளுக்காக ரூ.15.40 கோடி நலத்திட்டங்கள் – முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் இன்று ரூ.15.40 கோடி செலவில் வேளாண் துறைக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அத்துடன் பல முக்கிய திட்டங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேளாண் திட்டங்கள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு வேளாண்மை துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த வருடம் முதல் முறையாக வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வேளாண்மை துறையை மேம்படுத்தும் வாயிலான சிறந்த திட்டங்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இவை விவசாயிகள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது விவசாய நலனுக்காக ரூபாய் 15.40 கோடி ரூபாய் செலவில் வேளாண் துறைக்காக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும் நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் விதைகளை வழங்கினார். மேலும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதார விதை காட்டிலும் டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
TANCET 2023 தேர்வில் தேர்ச்சி பெற – Best Online Course!! உடனே Join செய்யுங்கள்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அத்துடன் சென்னையில் 40 லட்சம் ரூபாய் செலவில் 20 நடமாடும் காய்கறி அங்காடிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் வீடுகளில் இருந்து காய்கறிகளை குறைந்த விலையில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 19.16 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.