பிப் 12 – பிப். 23 வரை 144 தடை உத்தரவு – அரசு அறிவிப்பு!!

0
பிப் 12 - பிப். 23 வரை 144 தடை உத்தரவு - அரசு அறிவிப்பு!!
கூட்டத்தொடர் காரணமாக பெங்களூரில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு:
தமிழகத்தில் 2024ஆம் ஆண்டிற்கான சட்டசபை கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது. மேலும், பிப்ரவரி 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும், 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திலும் வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கூட்ட தொடரை முன்னிட்டு பெங்களூரில் விதான் சவுதா அமைந்துள்ள பகுதியில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதால் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!