ஆகஸ்ட் 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
ஆகஸ்ட் 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஆகஸ்ட் 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஆகஸ்ட் 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கொரோனா 2 ஆம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகளாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 7 பகுதிகளில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு நாளை (ஆகஸ்ட் 4) முதல் அமலுக்கு வருகிறது.

144 தடை உத்தரவு:

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அரசு அறிவித்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் அதிகமாக செயல்பட்டு வரும் 7 பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 4) முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில்,’தமிழகத்தில் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 30,549 பேருக்கு கொரோனா உறுதி – 422 பேர் பலி!

அந்த வரிசையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர், லப்பைக்குடிகாடு ஆகிய பகுதிகளில் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும். இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளை பொருத்தளவு, சிவன் கோவில் முதல் வானொலி திடல் சந்திப்பு, வானொலி திடல் முதல் பழைய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் முதல் காமராஜர் வளைவு வரையும் அமல்படுத்தப்படும்.

தொடர்ந்து பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள மார்க்கெட் பகுதி, போஸ்ட் ஆபிஸ் தெரு, கடைவீதி NSP ரோடு ஆகியவற்றிலும், அரும்பாவூர் பேரூராட்சியின் தழுதாழை சாலை முதல் பேரூராட்சி அலுவலகம், பாலக்கரை முதல் அ.மேட்டூர் வரையும், லப்பைக்குடிகாடு பேரூராட்சியின் மாட்டு பாலம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரையும் கட்டுப்பாடுகள் நீடிக்கும்.

TN Job “FB  Group” Join Now

தவிர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மருந்தகங்கள், பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தவிர மற்ற விற்பனை மையங்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முறையான கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!