இந்தியாவில் ஒரே நாளில் 30,549 பேருக்கு கொரோனா உறுதி – 422 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 422 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட, இரண்டாவது அலையில் அதிகளவு உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்படாமல், மாநில வாரியாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் பயனாக தற்போது 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இருப்பினும் இம்மாதத்திலேயே 3வது அலை தொடங்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
Tokyo Olympics Men’s Hockey Semi Final – இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!
இதனால் மாநில அரசுகள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனவே ஊரடங்கு தளர்வுகளில் கவனம் தேவை என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்திய வண்ணம் உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,17,26,507 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 422 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4,25,195 ஆக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 10 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
மேலும் 38,887 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 3,08,96,354 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் 4,04,958 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 61,09,587 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 47,85,44,114 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.