சென்னை அமேசான் நிறுவனத்தில் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் தொடக்கி வைப்பு!
சென்னை பெருங்குடியில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் புதிய சேவை மையத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேவை மையம்:
தமிழகத்தில் கடந்த வருடம் தலைமையேற்ற திமுக தலைமையிலான அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் வேலைவாய்ப்புகளும் இளைஞர்களுக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக சென்னை பெருங்குடியில் அமேசான் நிறுவனத்தின் புதிய சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள அமேசான் சேவை மையம் அமேசான் நிறுவனத்தின் 4வது நிறுவனம் ஆகும். இந்த மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
TN TET தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 14 நாட்கள் மட்டுமே!
அமேசான் நிறுவனம் நம்பர் 1 ஆன்லைன் ஷாப்பிங் தலமாக உள்ளது. இதன் மூலம் மக்கள் தேவையான அனைத்து பொருட்களையும் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் மக்களுக்கு திருப்திகரமான சேவை அளிக்கும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலும் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் நீரஜ் மிட்டல், அமேசான் நிறுவனத்திற்கு உட்பட்ட குலோபல் ரியல் எஸ்டேட் இன் இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை!
அதனை தொடர்ந்து முதல்வர் வேளச்சேரி சென்று காந்தி சாலை குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆலோசனை வழங்கும் குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் எஸ்தர் டப்லோ முதல்வரை சந்தித்து பேசினார். அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் இருந்தனர்.