Post Office இல் தினமும் ரூ.95 முதலீடு செய்தால் 14 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் தற்போது பெரும்பாலானவர்கள் இணைந்து வருகின்றனர். இதில் உள்ள ஒரு சேமிப்பு திட்டத்தில் தினமும் ரூ.95 முதலீடு செய்தால் ரூ.14 லட்சம் வரை பெற முடியும். அந்த திட்டத்தை பற்றிய முழு விபரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
சேமிப்பு திட்டம்
இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை இழந்து மிகவும் நெருக்கடி நிலையை சந்தித்து வந்தனர். அதனால் தற்போது தங்களின் சேமிப்பு பணத்தை சரியான முறையில் பாதுகாப்பாக சேமிக்க அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதில் முதலீடு செய்வதால் அதிகமான லாபத்தை பெற முடிகிறது. அத்துடன் இதில் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் முதலீடு செய்ய முடியும் என்பதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட இதில் இணைகின்றனர். அத்துடன் இதில் கிடைக்கும் வட்டி தொகை வங்கிகளை காட்டிலும் அதிகளவு லாபத்தை பெற முடிகிறது.
Exams Daily Mobile App Download
இதில் கடந்த 1995ம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு உதவும் வகையில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பாலிசியில் இணைவதற்கு குறைந்தபட்சமாக 19 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை சேமிக்க முடியும். இதில் நீங்கள் 15 ஆண்டுகள் என்ற முதிர்வு காலத்தை தேர்ந்தெடுத்தால் 6, 9 மற்றும் 12 ஆண்டுகளில் நீங்கள் பணத்தை பெற நினைத்தால் உங்களுக்கு சேமிப்பு பணத்துடன் 40% பணத்தை போனஸாக பெறுவீர்கள்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு? நெருக்கடியில் இளைஞர்கள்!
இதையடுத்து 25 வயதான ஒருவர் 20 ஆண்டு பாலிசியை தேர்ந்தெடுத்து அதில் 7 லட்சம் என்ற உறுதி தொகையும் தேர்ந்தெடுத்தால் அவர்கள் தினமும் ரூ.95-ஐ பிரீமியமாக செலுத்த வேண்டும். அதே போல் ஒவ்வொரு மாதமும் ரூ.2853 பிரீமியமாக செலுத்த வேண்டியிருக்கும். இதில் ரூ .7 லட்சம் உறுதி செய்யப்பட்ட தொகைக்கான ஆண்டு போனஸ் 33,600 ஆயிரமாக கிடைக்கும். அதாவது 1000 ரூபாய்க்கு ஆண்டு போனஸ் ரூ.48 ஆகும். அதன்படி முதிர்வு காலத்தின் முடிவில் மொத்தமாக ரூ.13.72 லட்சம் வரை சேமிப்பு தொகையாக பெற முடிகிறது. இது கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.