தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு? நெருக்கடியில் இளைஞர்கள்!
அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஓய்வு பெறும் வயது அதிகரிப்பதால் இளைஞர்கள் தான் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
ஓய்வு பெறும் வயது:
அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பதவி,சம்பள உயர்வு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை முறையாக வழங்க போதிய நிதி இல்லாத காரணத்தினால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டது. இதனால் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 வயதாக மாற்றினர். பின்பு, மீண்டும் நிதி நெருக்கடி காரணமாக 59 வயதிலிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஓய்வு பெறும் வயதை ஒரு ஆண்டுக்கு உயர்த்தி விட்டால் அரசு பணியில் அந்த ஒரு ஆண்டுகளும் இளைஞர்களால் பணியில் அமர முடியாது. இதனால் ஓய்வு பெறும் வயதை குறைக்கும்படி அவ்வப்போது கோரிக்கை வைக்கப்பட்டது. ஓய்வு பெறும் வயதை அதிகரித்து கொண்டே செல்வது இளைஞர்களின் வாழ்வாதாரத்தை தான் பாதிக்கிறது. தற்போது மீண்டும் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 1 முதல் கோடை விடுமுறை!
தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து கொண்டிருப்பதால் தான் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய நிதியை எப்படி சமாளிப்பது எனவும் நிதியமைச்சர் தலைமையில் அவ்வப்போது ஆலோசனை நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் வீண் செலவுகளை எப்படி குறைப்பது எனவும், அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எத்தனையோ இளைஞர்கள் ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாமலும், கூடபிறந்தவர்களை திருமணம் செய்து கொடுக்க முடியாத நிலையிலும், வருமானமின்றியும் படித்து முடித்து விட்டு கஷ்டபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அதற்க்காக அரசாங்க வேலையை மட்டும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்ற அர்த்ததோடு எழுதவில்லை. ஏதோ ஒரு பியூன் வேலையாக கூட. கிடைக்கலாம்.ஆனால் இதுமாதிரி என்றும் மார்கண்டேயனாக அரசாங்க வேலை பார்ப்பவர்கள் இருந்தால்,
இளையதலைமுறையினர் எப்போது வேலைக்கு போவது குடும்பத்தை எப்படி சமாளிப்பது.
62 வயது அல்ல 70 வயது வரைகூட அரசாங்த்தில் வேலைபார்ப்பவர்களைகூட வைத்து வேலை செய்ய வைத்துக்கொள்ளுங்கள்,
எப்படியென்றால் ,58 வயது முடிந்தவுடன் ஓய்வை கொடுத்துவிட்டு,பாதி ஊதியத்திற்க்கோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திற்க்கோ வேலைக்கு வைத்துவிட்டு,அதே சமயத்தில் புது ஆட்களையும் வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கும் வேலை நிரந்தரம் ஆகும்வரை ஒரு குறைந்த ஊதியத்தை வழங்கி,அதே சமயம் மூத்த வேலையாட்களிடமிருந்து வேலை நுணுக்கங்களை கற்றறிய ஒரு வாப்பையும் வழங்கினால்,அரசு சம்பந்தபட்ட வேலைகள் சீக்கிரமாக முடியுமல்லவா?