10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.12,000 ஊதியம்!
இந்திய தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் பணியிடம், ஊதியம், விண்ணப்ப முறை குறித்த விவரங்களை காண்போம்.
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றாலும் அதனை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்றவற்றால் வேலைவாய்ப்பு என்பது மக்களுக்கு அரிதான ஒன்றாக மாறிவிட்டது. தொற்று காலத்தில் ஏற்பட்ட தொழில் சரிவால் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வந்தனர். மத்திய, மாநில அரசு துறைகள் தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் அரசு நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்திய பிறகு வேலைவாய்ப்புகளை வழங்க அரசு மற்றும் தனியார் துறைகள் முன் வந்து அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு!
மற்ற துறைகளை தொடந்து அஞ்சல் துறையும் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கில் தபால் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது. அதன் படி தற்போது கிராம தபால் சேவை பதவியில் காலியாக உள்ள 38,926 பணியிடங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இப்பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது வரம்பு 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், BC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேற்சொன்ன பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://indiapostgdsonline.