Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.119 ரீசார்ஜ் திட்டத்தின் பலன்கள்! 300 SMS நீக்கம்!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிசம்பர் 1 ஆம் தேதி விலை உயர்வை அறிவித்தது. தற்போது ரூ.98 என்ற சலுகையை ரூ.119 என்று உயர்த்தி உள்ளது. அத்துடன் இதில் உள்ள பலன்களில் ஒரு சில மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ:
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் தனது ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலை உயர்வை கடந்த மாதம் அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலை உயர்வை அறிமுகப்படுத்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் தனது பிரீபெய்டு திட்டங்களிலும் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டம்? அரசு ஆலோசனை!
தற்போது ரூ.98 என்ற திட்டம் விலை அதிகரிக்கப்பட்டு ரூ.118 என மாற்றப்பட்டது. இந்த மாதம் 1ம் தேதி முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முன்னதாக இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் 28 நாட்களுக்கு வேலிடிட்டியும் வழங்கி வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் இத்திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் வகையில் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் Reliance Jio பயனர்கள் இதனை பெருமளவு பயன்படுத்தி கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் ஜன.3 முதல் முழுமையான முறையில் பள்ளிகள் திறப்பு – பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!
தற்போது இந்த திட்டம் ரூ.119 என மாற்றி வழங்கப்பட உள்ளது. அதில் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்பட்டு வந்தது நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேலிடிட்டி நாட்களும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 28 நாட்கள் வரை வழங்கப்பட்டு வந்த இந்த திட்டம் தற்போது 14 நாட்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இத்திட்டத்தின் மூலம் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் பெற முடியும். மேலும் தினமும் 1.5 ஜி.பி. டேட்டாவையும் 14 நாட்களுக்கு பெற முடியும். இதனை தொடர்ந்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் பெற முடியும். இவ்வாறு பலன்களை குறைத்ததால் Reliance Jio பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.