தமிழகத்தில் ஜன.3 முதல் முழுமையான முறையில் பள்ளிகள் திறப்பு – பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழகத்தில் பள்ளிகளை முழுமையாக திறக்கும் நடவடிக்கை தவறானது என்று தமிழக அரசுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் தற்போது கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வருகின்ற டிச.31ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜன.3 முதல் 6 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் டிச.16, 17 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை முழுமையாக திறப்பது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘நாடு முழுவதும் இதுவரை 130 கோடி பேருக்கு முழுமையான அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 50% பேர் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளனர். இப்போது இங்கிலாந்து போன்ற சில உலக நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இதுவரை 40 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்திற்கு – மீண்டும் ஒரு வாய்ப்பு!
இப்படிப்பட்ட சூழலில், ஒமிக்ரானின் தாக்கம் தெரியாமல் பள்ளிகளை மீண்டும் திறப்பது சரியான தேர்வு அல்ல. இதனை கருத்தில் எடுத்துக்கொண்டு அமைச்சர்கள் இந்த முடிவை மறுசீலனை செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இந்த சூழலில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சற்று யோசிக்க வேண்டிய விஷயம். கடந்த 2 ஆண்டு காலமாக நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் பழகி விட்டதால் இது மிகப்பெரிய அச்சமாக இருக்காது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.