மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஏப்ரல் முதல் 11% அகவிலைப்படி (DA) உயர்வு!
சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) 11 சதவீதமாக உயர்த்திய அரசு, அத்தொகையை வரும் ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்குவதாக அறிவித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச மாநில அரசு, சுமார் 6 லட்சத்து 67 ஆயிரம் நிரந்தர ஊழியர்களின் அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தி சமீபத்தில் அறிவித்திருந்தது. அந்த வகையில் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி தொகை ஏப்ரல் மாதத்தில் பெறப்படும் மார்ச் மாத சம்பளத்தில் இருந்து கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அம்மாநில அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஓய்வூதியதாரரின் அகவிலைப்படியை அதிகரிக்க சத்தீஸ்கர் அரசின் ஒப்புதல் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கவனத்திற்கு – அரசு முக்கிய தகவல்!
இதற்கு முன்னதாக மத்திய அரசை போலவே மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்த நிலையில் மாநில அரசின் பட்ஜெட்டிலும் இதற்கான ஒதுக்கீடு தற்போது செய்யப்பட்டுள்ளது. இது குறித்து துறைத் தலைவர்கள் மற்றும் ஆட்சியர்களுக்கு பிறப்பித்த உத்தரவில் நிதித்துறையின் துணைச் செயலர் பி.கே.ஸ்ரீவஸ்தவா கூறுகையில், 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 11 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசின் கருவூலத்தில் ஆண்டுக்கு மூன்றரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற அமைப்புகளின் ஊழியர்களுக்கு DA உயர்வு குறித்து தனித்தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறியுள்ள அரசாங்கம் பெருநிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் அதிகாரிகளின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படியை அதிகரிக்க முடிவு செய்வதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது DA உயர்வினால் யார் எவ்வளவு பயனடைவார்கள் என்று பார்க்கையில்,
- முதல் வகுப்பு ஊழியர்களுக்கு – ரூ.22 ,000 முதல் 25 ஆயிரம் ரூபாய்
- இரண்டாம் வகுப்பு ஊழியர்களுக்கு – ரூ.15,000 முதல் ரூ.21 ஆயிரம் ரூபாய்
- மூன்றாம் வகுப்பு ஊழியர்களுக்கு – ரூ.4,500 முதல் ஆறரை ஆயிரம் ரூபாய்
- 4ம் வகுப்பு ஊழியர்களுக்கு – ரூ.2,000 முதல் ரூ.3, 300 ரூபாய்
- ஆசிரியர் கேடர் – ரூ.3,300 முதல் ரூ.5,500