தமிழக பள்ளி மாணவர்களுக்கு 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் – திங்கள் முதல் விநியோகம்!
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தினால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு திங்கள் கிழமை அசல் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சான்றிதழ்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. கொரோனா தாக்கத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தாக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 9 மாவட்ட மக்கள் கவனத்திற்கு – உள்ளாட்சி தேர்தல் வழிகாட்டுதல்கள்!
பொதுமக்கள் அதிகம் கூடுவதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக இருந்ததால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் சூழல் அமையவில்லை. எனவே பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. மேலும் முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தற்போது மாணவர்களுக்கு 10ம் வகுப்பு சான்றிதழ்கள் வழங்க அரசு தேர்வு துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு பிறப்பித்த புதிய உத்தரவு – வருவாய் துறை ஊழியர்கள் அச்சம்!
நேற்று பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ்கள் மொத்தமாக வழங்கப்பட நிலையில் நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களுக்கு உள்பட்ட 301 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு வரும் திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கவுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியர்களிடம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் சான்றிதழ்களை ஒப்படைத்துள்ளார்.