தமிழகத்தில் 9 மாவட்ட மக்கள் கவனத்திற்கு – உள்ளாட்சி தேர்தல் வழிகாட்டுதல்கள்!
தமிழக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஆதார் அட்டை 11 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் அரசின் நிர்வாக பணிகளுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தினங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பிறப்பித்த புதிய உத்தரவு – வருவாய் துறை ஊழியர்கள் அச்சம்!
மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழிகாட்டுதல்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் வாக்காளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி சீட்டு பெற்றவர்கள் ஆகியோர் மட்டுமே வாக்கு சாவடியில் நுழைய வேண்டும் மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை முடியும் நாள் வரை தேர்தல் நடைபெறவுள்ள பகுதிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மது விற்பனை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்கும் தமிழக அரசு? கள நிலவரம்!
அதனை தொடர்ந்து ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டைகளை காண்பித்து வாக்களிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் போன்ற 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.