தமிழக மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறை
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இதில் மருத்துவ துறை ரீதியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் மருத்துவத்துறையில் 1,021 மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்தார்.
மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. இனி LPG சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு – மத்திய அரசு அறிக்கை!
இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு சுமார் 25,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவத்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் முதல்வரின் அறிவுறுத்தலை பின்பற்றி விரைவில் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.