மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. இனி LPG சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு – மத்திய அரசு அறிக்கை!
நாடு முழுவதும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு மானியம் ரூ.200 அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் மானியம்
இந்தியாவில் மாதா மாதம் நிகழும் பிரச்சனை என்றால் அது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் தான். இந்த சிலிண்டர் விலையானது மாதத்தின் தொடக்கத்தில் மாற்றம் செய்யப்படும். இதற்கு சர்வதேச சந்தை மதிப்பு, கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு ஆகியவை காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிலிண்டர் விலையானது இந்த மாதம் ரூ.50 உயர்ந்து ரூ. 1,118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – வெளியான அறிவிப்பு!
அந்த வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக தற்போது சிலிண்டருக்கான மானியம் ரூ. 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் மக்களுக்கு இந்த மானியம் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அருமையான அறிவிப்பு மூலமாக சுமார் 9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள் எனவும், இதன் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டிற்கான செலவு ரூ. 6100 கோடியும், 2023-24 ஆம் ஆண்டுக்கான செலவு ரூ. 7680கோடியாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மானியம் தகுதியானவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் எனவும் வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. நமது தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 35 லட்சம் பேர் இந்த மானியம் பெறுவார்கள் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download