தமிழக அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியை தொடரும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்:
தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்து வரும் நிலையில் எதிர்பார்ப்புகளை தாண்டி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக சில முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Bank of Baroda வங்கியில் வேலை – ரூ.89,890/- மாத ஊதியம்!
அதாவது, அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை மெருகேற்றுவதற்காக தமிழ் புதல்வன் என்கிற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். அதாவது, தற்போது வரையிலும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்த பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.