தமிழக அரசின் ரூ.1000 பஸ்பாஸ் ஜூன் 26 வரை பெறலாம் – போக்குவரத்து கழகம்!
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்படும் 1000 ரூபாய் பஸ் பாஸ் வரும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே பெறப்பட்ட பயண அட்டைகள் ஜூலை 15 வரை செல்லுபடியாகும்.
பஸ் பாஸ்:
மக்களின் தேவைகளை கருதி தமிழகத்தில் பேருந்துகளில் பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. தினமும் பேருந்துகளில் பயணம் செய்து வேலைக்கு செல்பவர்கள் தமிழக அரசின் 1000 ரூபாய் பஸ் பாஸ்சினை பெற்று கொள்வர். இந்த பாஸ் மூலமாக மாதம் முழுவதும் மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். இது பலருக்கும் உதவிகரமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வர உத்தரவு!
இதனால் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஏற்கனவே பஸ் பாஸ் பெற்றிருந்தோர் அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், வெள்ளை பலகை கொண்ட பேருந்துகளில் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இதனையடுத்து தற்போது சென்னையில் பேருந்து போக்குவரத்து மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது. இந்த 1000 ரூபாய் பஸ் பாஸினை வரும் ஜூன் 26 ஆம் தேதி வரை போக்குவரத்து கழகங்களில் இருந்து பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22 ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஏற்கனவே பெற்றிருந்த பேருந்து பயண அட்டையை ஜூலை 15 ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.