தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வர உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் குறித்து முக்கிய உத்தரவு ஒன்றை பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் வர தொடங்கியதால் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நிர்வாக பணிகளுக்காக திறக்கப்பட்டது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து ரத்து செய்யப்பட்ட பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள், மாணவர் சேர்க்கை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகை வசூல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
இதை அடுத்து ஊரடங்கு காரணமாக சில பகுதிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிக்கி தவிக்கின்றனர். மேலும் போக்குவரத்து இல்லாத காரணமாக பள்ளிக்கு வர முடியவில்லை என்று சில ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அனைத்து பள்ளிகளிலும் 50 சதவீத ஆசிரியர்கள் மூன்று நாட்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் மீதமுள்ள 50 சதவீத ஆசிரியர்கள் அடுத்த 3 நாட்களுக்கு பணிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
ஆனால் தற்போது ஆசிரியர்கள் சிலர் பணிக்கு வராத காரணத்தால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலான ஆசிரியர்கள் வெளியூர்களில் இருக்கும் காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து ஆசிரியர்களும் காலை 9 மணிக்கு சரியாக பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
School open date