தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி ஒதுக்கீடு மற்றும் மாதாந்திர உதவித்தொகை போன்ற திட்டங்களை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
உதவித்தொகை:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை தொடர்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் வண்ணம் பல சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச கல்வி, இலவச சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த முயற்சியால் தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஏப்ரல் முதல் 11% அகவிலைப்படி (DA) உயர்வு!
அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 18ம் தேதி நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்லூரி படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை தொடர வேண்டும் என்பதற்காகவும் இத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. உயர்கல்விக்கான மாத உதவித்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில் இட ஒதுக்கீடு ஆகியவற்றை அரசுப் பள்ளி மாணவ மாணவர்களை போல நிதி உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியருக்கு வழங்க வேண்டும் என்று அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.