தமிழகத்தில் போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் எரிக்க தடை – மீறினால் ரூ.1000 அபராதம்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தமிழர்களின் கலாச்சாரத்தை பின்பற்றும் விதமாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போகி பண்டிகை
தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாள் அன்று பொங்கல் பண்டிகையானது மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் விவசாயத்திற்கு உதவிபுரியும் சூரிய பகவானை வழிபட்டு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவார்கள். மேலும் மாட்டு பொங்கல் தினத்தன்று விவசாயத்திற்கு உதவும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு அடர்த்தியான வர்ணம் பூசி அதன் கழுத்தை சுற்றி மாலையிட அலங்காரம் செய்வார்கள். அத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து கடவுளுக்கு உணவு படைத்த பின் மாடுகளுக்கு வழங்கப்படும்.
நாளை ஒரு நாள் மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவில் தளர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இதையடுத்து காணும் பொங்கல் தினத்தில் உற்றார் உறவினர்களை சந்தித்தல், நண்பர்களை சந்தித்தல் மற்றும் பெரியவர்களிடம் ஆசிகளை பெறுதல் உள்ளிட்டவை நடைபெறும். அத்துடன் போகி பண்டிகை தினம் ‘மார்கழி’ மாதத்தின் இறுதி நாளாகும். மேலும் பழையன கழிந்து புதியன புகுத்தும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டில் உள்ள பழைய அல்லது தேவையில்லாத பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள். அதன்படி நாளை ஜனவரி 13ம் தேதி தமிழகத்தில் போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என சொல்லவில்லை – அமைச்சர் அதிரடி!
இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் பிளாஸ்டிக் அல்லது டயர் போன்ற பொருட்களை எரிக்க தடை என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விதிகளை மீறி பிளாஸ்டிக் அல்லது டயர் போன்ற பொருட்களை எரிப்பவர்கள் ரூ.1000 அபராதமாக செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனை அனைத்து மண்டலங்களிலும் உள்ள அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தபட்டுள்ளார்கள்.