தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் 2025-ம் ஆண்டு வரை மின்சார வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

மின்சார வாகனம்:

இந்தியாவில் எரிபொருள் தேவையை குறைக்கவும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மின் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 % ஆக குறைத்துள்ளது.

SBI Clerk 2023 முதன்மை தேர்வு தள்ளி வைப்பு? MP உள்ளிருப்பு போராட்டம்!

Follow our Instagram for more Latest Updates

அது மட்டுமில்ல, மின்சார வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. இதன் விளைவாக தற்போது மின்சார வாகனங்கள் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு உதவும் வகையில் ஆங்காங்கே சார்ஜ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி 2026 ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 100% வரிவிலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!