SBI Clerk 2023 முதன்மை தேர்வு தள்ளி வைப்பு? MP உள்ளிருப்பு போராட்டம்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில் SBI Clerk முதன்மை தேர்வும் நடைபெற உள்ளதால் இத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் SBI வங்கியின் அறையில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
உள்ளிருப்பு போராட்டம்
SBI வங்கிகளில் காலியாக இருக்கும் 5486 Clerk பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு SBI தேர்வு வாரியம் மூலம் கடந்த நவம்பர் 12, 19, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதையடுத்து இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 2ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வு எழுத தகுதியுடைவர்கள் ஆவார்கள்.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி இவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற ஜனவரி 15ம் தேதி அன்று நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஜனவரி 15ம் தேதி அன்று தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் SBI Clerk 2023 முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது போன்று பல்வேறு தரப்பினர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து தற்போது மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் இத்தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் இருக்கும் SBI வங்கியின் பொது மேலாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.