100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஊதியம் ரூ. 357 ஆக உயர்வு.. அரசாணை வெளியீடு!
இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் (100 நாள் வேலை) வழங்கப்பட்ட ஊதியத்தை உயர்த்த வேண்டி கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது ஊதியம் உயர்த்தப்பட்டு அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு:
இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வழங்கங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு சாலைகளை சரி செய்தல், குளங்கள் மற்றும் ஆறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் வாயிலாக தற்போது நாடு முழுவதும் சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்த 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இதன் அடிப்படையில் தற்போது ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் ஹரியானா மாநிலத்தில் ஊதியம் ரூ.331-ல் இருந்து ரூ. 357 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதே போல ராஜஸ்தானில் ரூ.231-ல் இருந்து ரூ.255 ஆகவும் தமிழகத்தில் 100 நாள் வேலைக்கான ஊதியம் ரூ.281ல் இருந்து ரூ.294 ஆகவும் உயர்த்தபட்டுள்ளது. தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது..
Exams Daily Mobile App Download