கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.10,000 – முதல்வர் அனுமதி!
டெல்லியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1, 825 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூபாய் 10,000 நிவாரணம் வழங்க டெல்லி துணை முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.
கொரோனா நிவாரணத்தொகை :
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முழு ஊரடங்கை அமல்ப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சம் அடைந்து வருகிறது. அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் கொரோனா பரவலினாலும் ,மற்றொரு பக்கம் அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினாலும் ஏழை மக்கள் மிக சிரமப்படுகின்றனர்.
ஜூலை 1 முதல் பள்ளிகளை திறப்பது இருந்து முடிவல்ல – மாநில அரசு அறிக்கை!!
தலைநகர் டெல்லி இரண்டாம் கொரோனா அலையால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்த தலைநகர் டெல்லியில் தொடர் ஊரடங்கு விதிக்கப்ட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கட்டுமான தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் படி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து கடந்த வருடம் 39,900 கட்டுமான தொழிலார்களுக்கு டெல்லி அரசு ஏற்கனவே நிவாரண தொகை வழங்கியது. மேலும் கட்டுமான தொழிலாளர்கள் இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் 5000 வழங்கபட்டது. இதை தொடர்ந்து இனி வரும் வாரங்களில் கடுமையாக பாதிக்கப்ட்டுள்ள பதிவு செய்த 1, 825 கட்டுமான தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணமாக 10,000 வழங்க டெல்லி துணை முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.